விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் |
டுவிட்டரில் சர்ச்சை கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டுக் கொண்டிருக்கும் இயக்குனர் ராம்கோபால் வர்மா, நேற்று கன்னடர்களை வம்புக்கு இழுத்து சில கருத்துக்களைப் பதிவிட்டுள்ளார்.
ராம்கோபால் வர்மா இயக்கி கடந்த வாரம் வெளிவந்த 'சர்க்கார் 3' படம் தோல்வியடைந்துவிட்டதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தெலுங்கிலிருந்து ஹிந்திக்குச் சென்ற ராம்கோபால் வர்மா, 'பாகுபலி 2' படம் பெற்ற பெரிய வெற்றியைத் தொடர்ந்தே அவருடைய 'சர்க்கார் 3' படத்தை ரிலீஸ் செய்தார்.
பாலிவுட் மட்டுமல்லாது உலக அளவிலும் 'பாகுபலி 2' இயக்குனர் ராஜமௌலிக்கு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. ராஜமௌலியை மிகச் சிறந்த இயக்குனர் என பாலிவுட்டினரும், ரசிகர்களும் பாராட்டி வருகிறார்கள். இந்த நிலையில் 'சர்க்கார் 3' படத் தோல்வியால் எங்கே தன்னை மட்டம் தட்டுவார்களோ என பயந்து, அந்தப் படத் தோல்வியை மறக்க வைக்கும் வகையில் மீண்டும் 'பாகுபலி 2' பற்றிய கருத்துக்களை ராம்கோபால் வர்மா பதிவிட்டு வருகிறார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு, ““மிகப் பெரும் ஹிந்திப் படம், மிகப் பெரும் தமிழ்ப படம், மிகப் பெரும் கன்னடப் படம், மிகப் பெரும் மலையாளப் படம்” என்று சொல்லப்படு ஒரு தெலுங்கு டப்பிங் படத்தைத் தவிர வேறு ஒன்றுமில்லை,” எனப் பதிவிட்டார்.
நேற்று கன்னட மக்களை வம்புக்கிழுக்கும் வகையில் மீண்டும் சில கருத்துக்களைப் பதிவிட்டுள்ளார். அதில், “கன்னடத்தில் மிகப் பெரும் படங்கள் என்று சொல்லப்பட்ட படங்களை விட 'பாகுபலி 2' தெலுங்குப் படம் இடிஇடிக்கும் அளவிற்கு பெரிய வெற்றியைப் பெற்றுள்ளதன் மூலம் கன்னடர்கள் பெருமைப்பட ஒன்றுமில்லை.
டப்பிங் படங்களை தடுத்து நிறுத்தினாலும் அந்த முயற்சியை ஒரு நேரடித் தெலுங்குப் படம் அதை தகர்த்துவிட்டது. இதன் மூலம் கன்னடர்கள் பெருமைப்படத் தேவையில்லை. அவர்கள் நல்ல படங்களை விரும்புகிறார்கள் என்று தெரிகிறது.
நேரடி கன்னடப் படங்களை விட, ஒரு தெலுங்குப் படத்தை பல முறை பார்த்து ரசித்ததற்காக மற்ற கன்னடர்களை எதிர்த்து பெருமை பேசும் கன்னடர்கள் போராடட்டும்,” என 'பாகுபலி 2' படத்திற்கும் சேர்த்து வேட்டு வைத்துள்ளார்.
ராம்கோபால் வர்மாவின் கருத்துக்களுக்கு கன்னட மக்கள் உடனடியாக பதிலளித்துள்ளனர். அவரது கருத்துக்களால் எதிர்காலத்தில் தெலுங்குப் படங்கள் கர்னாடகாவில் வெளிவருவதற்குக் கூட ஆபத்துகள் வந்தாலும் வரலாம்.