இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
சுமார் 12 வருடங்களாக சினிமாவில் பயணித்து வருகிறார் ராய்லட்சுமி. இன்னும் முன்னணி நடிகை பட்டியலில் சேரவில்லை என்றாலும், தென்னிந்திய படங்கள் மட்டுமின்றி இந்தி சினிமா வரை நடித்து விட்டார். சிரஞ்சீவியின் கைதி எண் 150 மற்றும் லாரன்சின் மொட்ட சிவா கெட்ட சிவா படங்களில் அயிட்டம் பாடலுக்கு நடனமாடினர். இந்தியில் அவர் நாயகியாக நடித்த ஜூலி-2 படம் ரிலீசுக்கு தயாராகிக்கொண்டிருக்கிறது.
மேலும், சில வருடங்களுக்கு முன்பே கிரிக்கெட் வீரர் தோனியுடன் கிசுகிசுவில் சிக்கிய ராய்லட்சுமியிடம், திருமணம் எப்போது? என்று கேட்டால், 30 வயதை கடந்து விட்ட நடிகைகளே தொடர்ந்து கதாநாயகிகளாக நடித்துக்கொண்டிருக்கிறார்கள். அப்படியிருக்க 28 வயதே ஆகும் எனது திருமணத்திற்கு ஒன்றும் அவசரமில்லை. இன்னும் சினிமாவில் நான் நீண்டதூரம் பயணித்த பிறகே திருமணம் செய்து கொள்வேன் என்கிறார் ராய்லட்சுமி.