இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
ரஜினி தற்போது தனது ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் போட்டோ எடுத்து வருகிறார். முதல் நாள் அவர்களிடையே பேசிய ரஜினி நான் அரசியலுக்கு வருவது ஆண்டவன் கையில் இருக்கிறது. அப்படி வந்தால் இதய சுத்தியுடன் இருப்பேன். பணம் சம்பாதிக்க நினைக்கிறவங்களை பக்கத்தில் சேர்க்க மாட்டேன் என்றார். இந்த நிலையில் ரஜினியின் நண்பர் ராஜ்பகதூர், ரஜினி கண்டிப்பாக அரசியலுக்கு வருவார் என்று தெரிவித்துள்ளார். ரஜினி பெங்களூருவில் பஸ் கண்டக்டராக இருந்தபோது டிரைவராக பணியாற்றியவர் ராஜ்பகதூர். அவர் மேலும் கூறியிருப்பதாவது:
ரஜினி அவரது உறவினர் திருமணத்திற்காக கடந்த 8ம் தேதி பெங்களூர் வந்திருந்தார். அப்போது அருடன் நிறைய பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அவர் தமிழ்நாட்டில் அரசியல் சூழ்நிலை பற்றி நிறைய வருத்தப்பட்டார். முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு எல்லாமே மாறிவிட்டது. தமிழகத்தின் எதிர்காலம் கவலை அளிப்பதாக இருக்கிறது. ஏழை மக்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும். என்று கூறினார்.
நான் வேண்டுமானல் அரசியலில் இறங்கட்டுமா உன் கருத்து என்ன என்று கேட்டார். என் கருத்து மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகத்தின் கருத்தே நீங்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்பதுதான் என்று அவரிடம் சொன்னேன். ரஜினி ஒரு தீர்க்கான முடிவோடு இருக்கிறார் என்பதை புரிந்து கொண்டேன். அவரது ரசிகர்கள் எல்லா கட்சியிலும் இருப்பதால் அவர் எந்த கட்சியிலும் சேர மாட்டார். தனிக்கட்சிதான் தொடங்குவார். என்கிறார் ராஜ்பகதூர்.