இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் |
மத்திய அரசு விரைவில் ஜிஎஸ்டி வரி கொண்டு வர இருக்கிறது. இந்த வரிவிதிப்பு வரும்போது தமிழ் சினிமாவுக்கு தமிழக அரசு வழங்கி வரும் வரிச்சலுகை கிடைக்காது, இதனால் ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மற்றம் தமிழக நிதி அமைச்சர் ஜெயகுமார் ஆகியோருக்கு விஷால் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கதிதில் 4500 சிறிய மற்றும் பெரிய பட்ஜெட் படத் தயாரிப்பாளர்கள் உள்ளனர். திரைப்படம் என்பது ஒரு கலை வடிவம், அதற்கான சந்தைப்படுத்துதல் பிரத்யேகமானது. தயாரிப்பாளர் படத்தை தயாரித்தாலும், விநியோஸ்தர்களும், திரையரங்க உரிமையாளர்களுமே அதன் வியாபார மையம். ரசிகர்களின் ஆதரவை வைத்து தான் படம் வெற்றியோ தோல்வியோ அடைகிறது. வெளிவரும் படங்களில் 6 முதல் 7 சதவிகித படங்களே வெற்றி பெறுகிறது. இதன் காரணமாக பெரும்பாலான தயாரிப்பாளர்கள் நஷ்டமே அடைகிறார்கள்.
தமிழக அரசு யு சான்றிதழ் படங்களுக்கு வரிவிலக்கு அளித்து வருகிறது. ஜிஎஸ்டி வரிவிதிப்பால் அதற்கு பாதிப்பு ஏற்படும், எனவே மாநில மொழி திரைப்படங்களுக்கு ஜிஎஸ்டி வரிவிதிப்பிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். திரைப்படத்துறையில் சேவை வரி கட்டி வருகிறார்கள். படத்தின் வருமானத்தில் கணிசமான தொகையை சேவை வரியாக கட்ட வேண்டியதிருப்பதால் சேவை வரியிலிருந்தும் விலக்கு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.