'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி |
மத்திய அரசு விரைவில் ஜிஎஸ்டி வரி கொண்டு வர இருக்கிறது. இந்த வரிவிதிப்பு வரும்போது தமிழ் சினிமாவுக்கு தமிழக அரசு வழங்கி வரும் வரிச்சலுகை கிடைக்காது, இதனால் ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மற்றம் தமிழக நிதி அமைச்சர் ஜெயகுமார் ஆகியோருக்கு விஷால் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கதிதில் 4500 சிறிய மற்றும் பெரிய பட்ஜெட் படத் தயாரிப்பாளர்கள் உள்ளனர். திரைப்படம் என்பது ஒரு கலை வடிவம், அதற்கான சந்தைப்படுத்துதல் பிரத்யேகமானது. தயாரிப்பாளர் படத்தை தயாரித்தாலும், விநியோஸ்தர்களும், திரையரங்க உரிமையாளர்களுமே அதன் வியாபார மையம். ரசிகர்களின் ஆதரவை வைத்து தான் படம் வெற்றியோ தோல்வியோ அடைகிறது. வெளிவரும் படங்களில் 6 முதல் 7 சதவிகித படங்களே வெற்றி பெறுகிறது. இதன் காரணமாக பெரும்பாலான தயாரிப்பாளர்கள் நஷ்டமே அடைகிறார்கள்.
தமிழக அரசு யு சான்றிதழ் படங்களுக்கு வரிவிலக்கு அளித்து வருகிறது. ஜிஎஸ்டி வரிவிதிப்பால் அதற்கு பாதிப்பு ஏற்படும், எனவே மாநில மொழி திரைப்படங்களுக்கு ஜிஎஸ்டி வரிவிதிப்பிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். திரைப்படத்துறையில் சேவை வரி கட்டி வருகிறார்கள். படத்தின் வருமானத்தில் கணிசமான தொகையை சேவை வரியாக கட்ட வேண்டியதிருப்பதால் சேவை வரியிலிருந்தும் விலக்கு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.