தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகை வனிதா எப்போதுமே பரபரப்புக்கு பஞ்சமில்லாதவர். போலீஸ் ஸ்டேஷன் வாசலில் அமர்ந்து தர்ணா செய்து பரபரப்பு ஏற்படுத்தியவர். சொந்த அப்பா-அம்மாவை பற்றிய பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தவர். வனிதா, சின்னத்திரை நடிகர் ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். அவரை விவாகரத்து செய்து விட்டு ஆனந்தராஜ் என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. பின்னர் அவர் ஆனந்தராஜையும் விவாகரத்து செய்தார்.
ஆனந்தராஜ் ஐதராபாத்திலும், வனிதா சென்னையிலும் வசிக்கிறார்கள். வனிதா இப்போது டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்டுடன் வாழ்ந்து வருகிறார். இந்த நிலையல் எனது குழந்தையை வனிதா கடத்திச் சென்று விட்டார் என்று முன்னாள் கணவர் ஆனந்தராஜ் ஐதராபாத் போலீசில் புகார் அளித்துள்ளார். திடீரென தனது வீட்டுக்கு வந்து யாருக்கும் தெரியாமல் குழந்தையை சென்னைக்கு கடத்திச் சென்று விட்டதாகவும் குழந்தையை மீட்டுத் தரவேண்டும் என்றும் அவர் தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.