Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

போர் வரும் போது பார்த்துக் கொள்வோம் : அரசியல் பிரவேசத்திற்கு தயாராகிறார் ரஜினி

19 மே, 2017 - 09:22 IST
எழுத்தின் அளவு:
Rajini-spoke-about-political-entry

தமிழ்நாட்டில் இன்றைக்கு ஹாட்-டாப்பிக்காக இருப்பவர் ரஜினி தான். அரசியல் பற்றி அவர் பேசும் பேச்சுகள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

கடந்த 5 நாட்களாக ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்து வந்தார் நடிகர் ரஜினி. இன்று (மே 19), கடைசிநாளிலும் ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்து கொண்டார். முன்னதாக ரசிகர்களிடம் ரஜினி பேசினார். அப்போது அவர் பேசிய பேச்சுகள் தமிழக அரசியல் வட்டாரத்தில் மட்டுமல்லாது, தேசிய அளவிலான அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியது இருக்கிறது. ரஜினி பேசிய விபரம் வருமாறு...


அரசியலில் எதிர்ப்பு தான் மூலதனம்


நான் எது பேசினாலும் அது சர்ச்சை ஆகிறது. இல்லாவிட்டால் விவாதம் ஆகிறது. எதிர்ப்பு இல்லாமல் வளர முடியாது. அதிலும் அரசியலில் எதிர்ப்பு இல்லாமல் இருக்காது. அரசியலில் எதிர்ப்பு தான் மூலதனம். ரசிகர்கள் மத்தியில் நான் பேசியது சமூகவலைதளங்களில் கீழ்த்தரமான வார்த்தைகளால் விமர்சனங்கள் வருவது வருத்தம் அளிக்கிறது.


நான் பச்சை தமிழன்


ரஜினி, தமிழரா என்ற கேள்வி எழுகிறது. நான் 24 வருடங்கள் தான் கர்நாடகாவில் இருந்தேன். கடந்த 44 வருடங்களாக உங்களுடன் தான் இருக்கிறேன். எனக்கு பெயர், புகழ், பணம் அள்ளிக் கொடுத்து, என்னை தமிழனாக்கியது ரசிகர்கள் தான். நான் இப்போது பச்சை தமிழன். என்னை நீங்கள் தூக்கி எறிந்தாலும் இமயமலையில் தான் போய் விழுவேனே தவிர, வேறு எந்த மாநிலத்திலும் போய் விழ மாட்டேன்.


நான் அரசியலுக்கு வரக்கூடாதா?


என்னை வாழ வைத்த தமிழ் மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என நான் நினைக்க கூடாதா? அதற்காக நான் அரசியலுக்கு வர கூடாதா? அதற்காக வேறு யாரும் இல்லையா? என கேட்கிறார்கள், இருக்கிறார்கள். ஸ்டாலின் நல்ல திறமையானவர், அன்புமணி நல்ல கல்வியாளர், உலகம் முழுவதும் சுற்றி வந்தவர். திருமாவளவன் தலித்துகளுக்காக போராடக் கூடியவர். சீமான் நல்ல போராளி.


அரசியல் மாற்றம் வேண்டும்


ஆனால் தமிழகத்தில் அரசியல் சிஸ்டம் நன்றாக இல்லை. அதனை சரி செய்ய மக்கள் சிந்தனையில் மாற்றம் வர வேண்டும். தமிழகத்தில் அனைவரும் இணைந்து தான் அரசியல் மாற்றத்தை கொண்டு வர முடியும். தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தால் சர்ச்சையாகிறது என்பதற்காக தான் பேசுவதை தவிர்க்கிறேன்.


போர் வரும்போது பார்த்து கொள்ளலாம்


இந்த விமர்சனங்கள் அனைத்தும் செடி வளர போடப்படும் உரம், மண்ணாக தான் பார்க்கிறேன். நம்மை எதிர்த்து நாம் வளர சிலர் உதவிக்கொண்டிருக்கிறார்கள். எனக்கென தனிப்பட்ட கடமைகள், வேலைகள், தொழில் உள்ளது. உங்களுக்கும் குடும்பம், பொறுப்புக்கள் உள்ளது. அதனால் பொறுமையாக இருங்கள், போர் வரும் அப்போது பார்த்துக் கொள்ளலாம். அதுவரை பொறுமையாக இருங்கள்.


இவ்வாறு ரஜினி பேசினார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in