பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சமீபகாலமாக தோல்விகளை சந்தித்து வந்த அதர்வாவுக்கு, மிகப் பெரிய நம்பிக்கை அளிக்கும் வகையில் தயாராகி வருகிறது, ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் என்ற படம். இதில்,
அதர்வாவுக்கு, ஐஸ்வர்யா ராஜேஷ், ரெஜினா, பிரணீதா, அதீதி போஹங்கர் ஆகிய, நான்கு ஹீரோயின்கள் உள்ளனர். இதனால், உற்சாகத்தில் மிதக்கிறார் அதர்வா. 'படத்தின் கதைக்கு நான்கு ஹீரோயின்கள் தேவைப்பட்டனர். அதனால், நான்கு பேரை நடிக்க வைத்துள்ளோம்; மற்றபடி, கவர்ச்சிக்காக இதைச் செய்யவில்லை' என்கிறார் இயக்குனர். இதில், அதர்வாவுடன் இணைந்து, படம் முழுக்க, பட்டையை கிளப்பியுள்ளார் சூரி. 'ரொம்ப நாட்களுக்கு பின், குழந்தைகளை கவரும் வகையில் மனதுக்கு நிறைவான, காமெடி காட்சிகளில் நடித்துள்ளேன்' என்கிறார் சூரி.