இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ஒரு கதாசிரியர் தனது கதையை திருடிவிட்டதாக இயக்குனர், தயாரிப்பாளர் அவ்வளவு ஏன் ஒரு கதாநாயகன் மீது கூட பழிபோட்ட நிகழ்வுகளை நிறையவே பார்த்திருக்கிறோம். ஆனால் இப்போது பாலிவுட்டில் நடக்கு விவகாரம் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, பாலிவுட் திரையுலகத்திற்கே புதிய விஷயம் தான்.. ஆம்.. கங்கனா ரணாவத் நடித்துள்ள 'சிம்ரன்' படத்தின் கதாசிரியர் அபூர்வா அஸ்ராணி, தனது கதையை சொந்தம் கொண்டாடுவதாக நாயகி 'கங்கனாவின் மீது குற்றம் சாட்டியுள்ளார்..
நன்றாக கவனியுங்கள்.. கதையை திருடிவிட்டதாக அவர் சொல்லவில்லை.. தனது கடின உழைப்பை அவர் சொந்தம் கொண்டாடுவதாகத்தான் குற்றம் சாட்டியுள்ளார்.. ஆரம்பத்தில் இருந்தே பல பேட்டிகளின்போது இந்தப்படத்தின் கதையை தானே எழுதியதாக கங்கனா சொல்லி வந்தார்.. இதை படத்தின் இயக்குனர் ஹன்ஷால் மேத்தாவும் எந்த இடத்திலும் மறுக்கவும் இல்லை.
இதை மெய்ப்பிக்கும் விதமாக சமீபத்தில் வெளியான 'சிம்ரன்' பட பர்ஸ்ட் லுக் போஸ்டரில் கதைவசனம் என கங்கனாவுக்கு முதலில் பெயர் போடப்பட்டு, அதை தொடர்ந்தே படத்தின் கதை வசனத்தை எழுதிய அபூர்வா அஸ்ரானியின் பெயர் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஒரு நாயகி கதையை தானே எழுதியாக இன்னொருவரின் கதையை சொந்தம் கொண்டாடுவது கொஞ்சம் புதுமையாகத்தான் இருக்கிறது.