‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
ஒரு கதாசிரியர் தனது கதையை திருடிவிட்டதாக இயக்குனர், தயாரிப்பாளர் அவ்வளவு ஏன் ஒரு கதாநாயகன் மீது கூட பழிபோட்ட நிகழ்வுகளை நிறையவே பார்த்திருக்கிறோம். ஆனால் இப்போது பாலிவுட்டில் நடக்கு விவகாரம் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, பாலிவுட் திரையுலகத்திற்கே புதிய விஷயம் தான்.. ஆம்.. கங்கனா ரணாவத் நடித்துள்ள 'சிம்ரன்' படத்தின் கதாசிரியர் அபூர்வா அஸ்ராணி, தனது கதையை சொந்தம் கொண்டாடுவதாக நாயகி 'கங்கனாவின் மீது குற்றம் சாட்டியுள்ளார்..
நன்றாக கவனியுங்கள்.. கதையை திருடிவிட்டதாக அவர் சொல்லவில்லை.. தனது கடின உழைப்பை அவர் சொந்தம் கொண்டாடுவதாகத்தான் குற்றம் சாட்டியுள்ளார்.. ஆரம்பத்தில் இருந்தே பல பேட்டிகளின்போது இந்தப்படத்தின் கதையை தானே எழுதியதாக கங்கனா சொல்லி வந்தார்.. இதை படத்தின் இயக்குனர் ஹன்ஷால் மேத்தாவும் எந்த இடத்திலும் மறுக்கவும் இல்லை.
இதை மெய்ப்பிக்கும் விதமாக சமீபத்தில் வெளியான 'சிம்ரன்' பட பர்ஸ்ட் லுக் போஸ்டரில் கதைவசனம் என கங்கனாவுக்கு முதலில் பெயர் போடப்பட்டு, அதை தொடர்ந்தே படத்தின் கதை வசனத்தை எழுதிய அபூர்வா அஸ்ரானியின் பெயர் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஒரு நாயகி கதையை தானே எழுதியாக இன்னொருவரின் கதையை சொந்தம் கொண்டாடுவது கொஞ்சம் புதுமையாகத்தான் இருக்கிறது.