தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஒரு கதாசிரியர் தனது கதையை திருடிவிட்டதாக இயக்குனர், தயாரிப்பாளர் அவ்வளவு ஏன் ஒரு கதாநாயகன் மீது கூட பழிபோட்ட நிகழ்வுகளை நிறையவே பார்த்திருக்கிறோம். ஆனால் இப்போது பாலிவுட்டில் நடக்கு விவகாரம் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, பாலிவுட் திரையுலகத்திற்கே புதிய விஷயம் தான்.. ஆம்.. கங்கனா ரணாவத் நடித்துள்ள 'சிம்ரன்' படத்தின் கதாசிரியர் அபூர்வா அஸ்ராணி, தனது கதையை சொந்தம் கொண்டாடுவதாக நாயகி 'கங்கனாவின் மீது குற்றம் சாட்டியுள்ளார்..
நன்றாக கவனியுங்கள்.. கதையை திருடிவிட்டதாக அவர் சொல்லவில்லை.. தனது கடின உழைப்பை அவர் சொந்தம் கொண்டாடுவதாகத்தான் குற்றம் சாட்டியுள்ளார்.. ஆரம்பத்தில் இருந்தே பல பேட்டிகளின்போது இந்தப்படத்தின் கதையை தானே எழுதியதாக கங்கனா சொல்லி வந்தார்.. இதை படத்தின் இயக்குனர் ஹன்ஷால் மேத்தாவும் எந்த இடத்திலும் மறுக்கவும் இல்லை.
இதை மெய்ப்பிக்கும் விதமாக சமீபத்தில் வெளியான 'சிம்ரன்' பட பர்ஸ்ட் லுக் போஸ்டரில் கதைவசனம் என கங்கனாவுக்கு முதலில் பெயர் போடப்பட்டு, அதை தொடர்ந்தே படத்தின் கதை வசனத்தை எழுதிய அபூர்வா அஸ்ரானியின் பெயர் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஒரு நாயகி கதையை தானே எழுதியாக இன்னொருவரின் கதையை சொந்தம் கொண்டாடுவது கொஞ்சம் புதுமையாகத்தான் இருக்கிறது.