டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
திருவனந்தபுரம் : நடிகர் கலாபவன் மணியின் மரணத்தை சிபிஐ.,க்கு மாற்றி கேரள ஐகோர்ட் உத்தரவிட்டது. தமிழ் மற்றும் மலையாளம் சினிமாவில் பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் கலாபவன் மணி. இவர் கடந்த 2016-ம் ஆண்டு, மார்ச் 6-ம் தேதி மர்மமான முறையில் அவரது பண்ணை வீட்டில் இறந்து கிடந்தார். கலாபவன் மணியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், வழக்கை சிபிஐ.,க்கு மாற்ற வேண்டும் என்று கோரி அவரது சகோதரர் மற்றும் மனைவி ஆகியோர் கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, கலாபவன் மணியின் மரண வழக்கை சிபிஐ.,க்கு மாற்ற உத்தரவிட்டார். கோர்ட்டின் உத்தரவையடுத்து கலாபவன் மணியின் மரண வழக்கு சிபிஐ., கைக்கு மாறியுள்ளது. இதன்பின்னராவது அவரது மரணத்தில் உள்ள சந்தேகத்திற்கு விடை கிடைக்குமா...? என்று பார்ப்போம்.