விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி |
திருவனந்தபுரம் : நடிகர் கலாபவன் மணியின் மரணத்தை சிபிஐ.,க்கு மாற்றி கேரள ஐகோர்ட் உத்தரவிட்டது. தமிழ் மற்றும் மலையாளம் சினிமாவில் பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் கலாபவன் மணி. இவர் கடந்த 2016-ம் ஆண்டு, மார்ச் 6-ம் தேதி மர்மமான முறையில் அவரது பண்ணை வீட்டில் இறந்து கிடந்தார். கலாபவன் மணியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், வழக்கை சிபிஐ.,க்கு மாற்ற வேண்டும் என்று கோரி அவரது சகோதரர் மற்றும் மனைவி ஆகியோர் கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, கலாபவன் மணியின் மரண வழக்கை சிபிஐ.,க்கு மாற்ற உத்தரவிட்டார். கோர்ட்டின் உத்தரவையடுத்து கலாபவன் மணியின் மரண வழக்கு சிபிஐ., கைக்கு மாறியுள்ளது. இதன்பின்னராவது அவரது மரணத்தில் உள்ள சந்தேகத்திற்கு விடை கிடைக்குமா...? என்று பார்ப்போம்.