‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
திருவனந்தபுரம் : நடிகர் கலாபவன் மணியின் மரணத்தை சிபிஐ.,க்கு மாற்றி கேரள ஐகோர்ட் உத்தரவிட்டது. தமிழ் மற்றும் மலையாளம் சினிமாவில் பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் கலாபவன் மணி. இவர் கடந்த 2016-ம் ஆண்டு, மார்ச் 6-ம் தேதி மர்மமான முறையில் அவரது பண்ணை வீட்டில் இறந்து கிடந்தார். கலாபவன் மணியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், வழக்கை சிபிஐ.,க்கு மாற்ற வேண்டும் என்று கோரி அவரது சகோதரர் மற்றும் மனைவி ஆகியோர் கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, கலாபவன் மணியின் மரண வழக்கை சிபிஐ.,க்கு மாற்ற உத்தரவிட்டார். கோர்ட்டின் உத்தரவையடுத்து கலாபவன் மணியின் மரண வழக்கு சிபிஐ., கைக்கு மாறியுள்ளது. இதன்பின்னராவது அவரது மரணத்தில் உள்ள சந்தேகத்திற்கு விடை கிடைக்குமா...? என்று பார்ப்போம்.