தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
திருவனந்தபுரம் : நடிகர் கலாபவன் மணியின் மரணத்தை சிபிஐ.,க்கு மாற்றி கேரள ஐகோர்ட் உத்தரவிட்டது. தமிழ் மற்றும் மலையாளம் சினிமாவில் பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் கலாபவன் மணி. இவர் கடந்த 2016-ம் ஆண்டு, மார்ச் 6-ம் தேதி மர்மமான முறையில் அவரது பண்ணை வீட்டில் இறந்து கிடந்தார். கலாபவன் மணியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், வழக்கை சிபிஐ.,க்கு மாற்ற வேண்டும் என்று கோரி அவரது சகோதரர் மற்றும் மனைவி ஆகியோர் கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, கலாபவன் மணியின் மரண வழக்கை சிபிஐ.,க்கு மாற்ற உத்தரவிட்டார். கோர்ட்டின் உத்தரவையடுத்து கலாபவன் மணியின் மரண வழக்கு சிபிஐ., கைக்கு மாறியுள்ளது. இதன்பின்னராவது அவரது மரணத்தில் உள்ள சந்தேகத்திற்கு விடை கிடைக்குமா...? என்று பார்ப்போம்.