தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் வருவாரா... மாட்டாரா.... என்று கேள்வி தான் தமிழ்நாடு முழுக்க பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 8 ஆண்டுகளுக்கு பிறகு தனது ரசிகர்களை சந்தித்து வரும் ரஜினி, முதல்நாள் சந்திப்பின் போது அரசியல் பற்றிய தனது கருத்தினை முன் வைத்தார். வழக்கம் போல் தான் அரசியலில் களமிறங்குவேன் என்று நேரடியாக சொல்லவில்லை.
இந்நிலையில் ரஜினியின் அரசியல் பேச்சை வைத்து பா.ஜ., காங்கிரஸ் என பல்வேறு கட்சியினரும் ரஜினியை தங்களது கட்சிக்கு வர வேண்டும் என்று அழைத்து வருகின்றனர். இதுதொடர்பாக வலைதளங்களில் ஒரு பெரிய விவாதமே போய் கொண்டு இருக்கிறது. பலரும் அவர் வருவதை வரவேற்றும், பலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே ரஜினியின் அரசியல் பேச்சு குறித்து சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ தனது பேஸ்புக் பக்கத்தில் வெளுத்து வாங்கியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது... தென்னிந்திய மக்கள் மீது மிகுந்த மதிப்பு வைத்திருக்கிறேன். ஆனால் சினிமாக்காரர்களை இப்படி அவர்கள் கொண்டாடுவது முட்டாள்தனமாக இருக்கிறது. நான், சென்னை அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்து கொண்டிருந்தபோது சில தமிழ் நண்பர்களுடன் சேர்ந்து சிவாஜி நடித்த படம் ஒன்றை தியேட்டரில் பார்க்க சென்றேன். அப்போது அவர் திரையில் தோன்றிய போது ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு இன்றும் என் நினைவில் இருக்கிறது. அதேப்போன்று இப்போது தென்னிந்தியர்கள் ரஜினி மீது பைத்தியமாக உள்ளார்கள். அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்று நினைக்கிறார்கள்.
ரஜினி அரசியலுக்கு வர அவரிடம் என்ன இருக்கிறது. நாட்டின் மிகப்பெரிய பிரச்னைகளாக இருக்கும் வறுமை, வேலையின்மை, ஊட்டச்சத்துகுறைபாடு, சுகாதார பிரச்னை, விவசாயிகளின் துயரங்கள் போன்றவற்றை தீர்ப்பதற்கு அவரிடம் ஏதாவது விஷயங்கள் உள்ளதா...? ஒரு விஷயமும் அவரிடம் இல்லை. பின்னர் எதற்காக ரஜினியை அரசியலுக்கு வர வேண்டும் என்று நினைக்கிறார்கள். அமிதாப்பச்சனை போன்று ரஜினிக்கும் தலையில் ஒன்றும் இல்லை.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.