ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு, ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா மற்றும் பலர் நடிக்கும் 'ஸ்பைடர்' படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. முன்னதாக இந்தப் படப்பிடிப்பு ஐதராபாத் அருகில் பிபி நகர் பகுதியில் உள்ள என்ஐஎம்எஸ் மருத்துவமனை வளாகத்தில் சில நாட்கள் படமானது. அப்போது அங்குள்ள உள்ளூர் கட்சியினர் சிலர் படப்பிடிப்புக்கு எதிராக போராட்டம் நடத்தியதாகவும், படப்பிடிப்புக்கு அளிக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று போராடினர். அதைத் தொடர்ந்து அனுமதியை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ரத்து செய்ததாக செய்திகளும் வெளிவந்தன. அதைத் தொடர்ந்து படப்பிடிப்பு சென்னைக்கு மாற்றப்பட்ட கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.
இதனிடையே, படப்பிடிப்பு சென்னைக்கு மாற்றப்பட்டது குறித்து படத் தயாரிப்பாளர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அதற்கான காரணத்தைச் சொல்லியிருக்கிறார். “ஐதராபாத்தில் படப்பிடிப்பு ரத்து ஆனதற்கு உள்ளூர் கட்சியினரின் போராட்டம் காரணமல்ல. மருத்துவமனை சில சட்டச் சிக்கல்களில் இருக்கிறது. அதனால், அங்கு தொடர்ந்து நடத்த வேண்டாம் என முடிவு செய்து படப்பிடிப்பை சென்னைக்கு மாற்றினோம்,'' என்று தெரிவித்திருக்கிறார்.