இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
அ.தி.மு.க., பேச்சாளரான, நடிகை விந்தியா நேற்று திடீரென, ஜெ., நினைவிடம் வந்ததால், பரபரப்பு ஏற்பட்டது. நடிகை விந்தியா, நேற்று மாலை, 6:00 மணிக்கு, நான்கு பெட்டி மாம்பழங்களுடன், ஜெ., நினைவிடம் வந்தார். மாம்பழங்களை நினைவிடத்தில் வைத்து வணங்கினார். பின் மாம்பழங்களை அங்கு இருந்தோருக்கு, வினியோகித்தார்.
பின், விந்தியா கூறியதாவது: நான் கட்சி ஆரம்பிக்க இங்கு வரவில்லை. ஆண்டுதோறும் எங்கள் தோட்டத்து மாம்பழத்தை, அவருக்கு வழங்குவது வழக்கம். தற்போது அவர் இங்கு இருப்பதால், வந்தேன். அவர் உடல் மண்ணுக்குள் இருக்கலாம். அவரது அன்பு, ஆட்சி, தமிழக மக்கள் மனதில் உள்ளது. நான் கொடுக்கும் மாம்பழம், மக்களுக்கு கொடுத்தால், அவருக்கு போய் சேரும்.
அ.தி.மு.க.,வின் இரு அணிகளும் இணைவது நல்லது. நான் தற்போது, எந்த அணியிலும் இல்லை. ஜெ., இறப்பு என் தலையில், இடி விழுந்தது போல் இருந்தது. விரைவில், அ.தி.மு.க., பேச்சாளராகவும், அ.தி.மு.க., கட்சிக்காரியாகவும், வெளியில் வருவேன். இவ்வாறு அவர் கூறினார்.