‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
இந்தியில் சல்மான்கான் நடத்திய டிவி நிகழ்ச்சி பிக்பாஸ். இந்திய அளவில் மிக பிரலமான இந்த நிகழ்ச்சியை தற்போது தமிழில் கமல்ஹாசன் நடத்துகிறார். வருகிற ஜூன் மாதம் 18-ந்தேதி முதல் விஜய் டிவியில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. 15 பிரபலங்கள் 100 நாட்கள் ஒரே வீட்டில் தங்க வேண்டும். மொபைல், கடிகாரம், டிவி, நாளிதழ்கள் என எந்தவொரு விசயமும் அவர்கள் தங்கும் வீட்டில் இருக்காது.
முக்கியமாக, கேமரா மூலம் அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள். அவர்களை கமல் மட்டும் சென்று சந்திப்பார். அவர்களில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதுதான் போட்டி. இப்படியொரு தகவல் வெளியானதில் இருந்து அனைவருமே இந்த நிகழ்ச்சியை காண ஆவலாக உள்ளனர். இந்த நிலையில், நடிகர் சூர்யா தனது டுவிட்டரில், கமல் சார் நீங்கள் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியை காண நான் ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.