ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் |
நடிகர் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த பேச்சுக்கு வரும் விமர்சனங்களுக்கு, வரும், 19ம் தேதி பதிலடி கொடுப்பார் என, நேற்று, அவரைச் சந்தித்த ரசிகர்கள் தெரிவித்தனர்.
நடிகர் ரஜினி, சென்னை ராகவேந்திரா மண்டபத்தில், ரசிகர்களை சந்தித்து வருகிறார். முதல் நாள் சந்தித்தபோது, நிருபர்களிடம் பேசிய ரஜினி, நான் என்ன ஆக வேண்டும் என்பது, இறைவன் கையில் உள்ளது. ஒரு வேளை அரசியலுக்கு வரும் சூழல் உருவானால், பணம் சம்பாதிக்க நினைப்போரை என் அருகே கூட சேர்க்க மாட்டேன் என்றார். இது, பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று, மூன்றாவது நாளாக, ரசிகர்களை சந்தித்தார்; போட்டோ எடுத்துக் கொண்டார். ஆனால், ரசிகர்களுடன் ஏதும் பேசவில்லை.
ரஜினியை சந்தித்து விட்டு வந்த, ரசிகர்கள் கூறியதாவது: ரஜினியின் பேச்சு குறித்து, பலரும் விமர்சித்து வருகின்றனர். சமூக வலைதளங்களிலும், கேலி, கிண்டல் பதிவுகளும் வந்த வண்ணம் உள்ளன. இவற்றை தொகுத்து, உதவியாளர்கள், அவரின் பார்வைக்கு கொண்டு சென்றுள்ளனர். ரசிகர்கள் சந்திப்பு, வரும், 19ல் முடிகிறது. இந்த விமர்சனங்களுக்கெல்லாம், அப்போது அவர் பதிலடி கொடுப்பார். இவ்வாறு அவர்கள் கூறினர்.