பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
'பாகுபலி 2' படத்தின் 'பைரசி', படம் வெளியான அன்றே வெளியாகியது. அதற்குப் பிறகு சமூக வலைத்தள ஊடகமான ஃபேஸ்புக்கில் கூட நேரடியாக ஒளிபரப்பப்பட்டது என்றும் செய்திகள் வெளிவந்தது. இருந்தாலும் அதையெல்லாம் மீறி மக்களே படத்தைத் தியேட்டரில் வந்து தான் பார்க்க வேண்டும் என தியேட்டர்களை நோக்கி படையெடுத்தார்கள். அதனால்தான், 1500 கோடியை நோக்கி வசூல் போய்க் கொண்டிருக்கிறது.
இந்த சூழ்நிலையில் படத்தின் தயாரிப்பாளர்களிடம் பணம் கேட்டு மிரட்டியதாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் பீகாரைச் சேர்ந்த தியேட்டர் உரிமையாளரும் ஒருவராம். அவருடைய தியேட்டரிலிருந்து 'பாகுபலி 2' படத்தின் காப்பியை உயர்தர தொழில்நுட்பத்தில் டவுன்லோட் செய்து, அதை டிவிடிக்கு மாற்றுவதற்காக எச்டி தொழில்நுட்பத்திலும் பதிவிட்டுள்ளார்கள். அதன் பின் அவற்றை இணையங்களில் வெளியிடாமல் இருக்க தயாரிப்பாளர்களிடம் 15 லட்ச ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளார்களாம். அதன் பின் சைபர் கிரைமை தயாரிப்பாளர்கள் அணுகியுள்ளனர். விசாரித்த காவல் துறையினர் அது சம்பந்தமாக 6 பேரைக் கைது செய்துள்ளனர். விசாரணையில் தனுஷ் இயக்கிய 'ப பாண்டி' படத்தின் டிவிடியும் சிக்கியுள்ளதாம்.
டோலிவுட்டில் இதுதான் இப்போதைய பரபரப்புச் செய்தியாக உள்ளது.