600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
பாலிவுட்டின் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான்கான். இவரது தந்தை சலீம் கானுக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி சுசிலா சராக். முதல்மனைவிக்கு பிறந்தவர்கள் தான் சல்மான், அர்பாஸ் உள்ளிட்ட நான்கு பிள்ளைகள். இரண்டாவது மனைவி நடிகை ஹெலன். பர்மாவிலிருந்து மும்பைக்கு இடம்பெயர்ந்தவர். சிறுவயதில் மிகவும் கஷ்டப்பட்டவர். தன் குடும்பத்தை காப்பாற்ற சினிமாவில் நடிகையாக களமிறங்கினார். பல்வேறு படங்களில் நடனமாடி ரசிகர்களை மகிழ்வித்தார். இவரை காதலித்து சலீம் கான் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு குழந்தை கிடையாது. அர்பிதா கானை தத்தெடுத்து வளர்த்தார்.
இந்நிலையில், தன் சித்தி ஹெலனின் வாழ்க்கையை படமாக எடுக்க முடிவு செய்துள்ளார் சல்மான் கான். அவர் வாழ்க்கையில் பட்ட கஷ்டங்கள், சினிமாவில் எப்படி முன்னணி நடிகையாக உயர்ந்து பிரபலமானார் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இப்படத்தில் இடம்பெற இருக்கின்றன. படத்திற்கான கதையை சல்மானின் தந்தை சலீம் கானே எழுத உள்ளார். இயக்குநர் முடிவாகவில்லை, சல்மான் தயாரிக்க உள்ளார். கதைப்பணி முடிந்ததும் இயக்குநர், ஹீரோயின் உள்ளிட்ட மற்ற தேர்வுகள் நடைபெற இருக்கிறது.