தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடன அமைப்பாளராக இருந்து இயக்குநராக மாறிய ரெமோ டிசோசா, நடிகர்கள் அஜய் தேவ்கன் மற்றும் சூரஜ் பஞ்சோலியை வைத்து ஒரு படத்தை இயக்க திட்டமிட்டார். இதுதொடர்பான வேலைகள் மும்முரமாய் நடந்து வந்தன. விரைவில் படப்பிடிப்பை ஆரம்பிப்பார்கள் என்று பார்த்தால் தற்போது படத்தை கிடப்பில் போட்டுவிட்டார்கள்.
ரெமோ, அஜய் மற்றும் சூரஜ் ஆகிய மூவருமே தங்களது படங்களில் பிஸியாக இருப்பதால் தற்போதைய சூழலில் இவர்கள் கூட்டணியில் படம் உருவாக வாய்ப்பில்லையாம். அதனால் சம்பந்தப்பட்டவர்கள் அவரவர் படங்களை முடித்த பின்னர் இந்த கூட்டணியை தொடரலாம் என்று எண்ணியுள்ளார்களாம்.
தற்போது ரெமோ டிசோசா, மீண்டும் நடனத்தை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். அஜய், பாத்சாகோ மற்றும் கோல்மால் அகைன் படங்களில் பிஸியாக உள்ளார். சூரஜ் பஞ்சோலி, பிரபுதேவா படம் மற்றும் பரூக் கபீரின் படங்களில் பிஸியாக உள்ளார்.