தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சென்னை: நடிகர் ரஜினி திடீர் என அரசியல் பேச ஆரம்பித்திருப்பிதன் பின்னணி குறித்தத் தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. இது குறித்து, அவருக்கு நெருக்கமான சிலர் கூறியதாவது:
அரசியல் ஆசை
நடிகர் ரஜினிக்கு 1996 முதலே தீவிர அரசியலில் குதிக்க வேண்டும் என்பது அவருடைய ஆசை. ஆனால், அவரைப் பொறுத்த வரையில், எதிலும் ரிஸ்க் எடுக்க விரும்பாதவர். தன்னை சந்திக்க வரும் அத்தனை பேரிடமும், அவர் தமிழக அரசியல் முதல் தேசிய அரசியல் வரை, நிறைய பேசுவார். பேச்சின் முடிவில், ஒருவேளை, நான் தீவிர அரசியலில் களம் இறங்குகிறேன் என வைத்துக் கொள்வோம். அந்த சூழல் எப்படி இருக்கும்? உங்களுக்கு தெரிந்ததை நீங்கள் முதலில் சொல்லுங்கள்; பின், உங்களுக்கு தெரிந்தவர்கள், நெருக்கமானவர்களிடம் கேட்டு, அவர்கள் கருத்துக்களை சொல்லுங்கள் என்று, மறக்காமல் கேட்பார்.
கருத்து கேட்பு
ஒவ்வொருவரும் சொல்லும் கருத்துக்கள் அனைத்தையும் உள்வாங்கிக் கொள்வாரே தவிர, தனிப்பட்ட முறையில், அரசியல் குறித்து அவர் எந்த கருத்தையும் வெளிப்படையாக சொல்ல மாட்டார். ஒருவேளை, அரசியலில் தோற்று விட்டால் என்ன செய்வது என்ற கேள்வியையும் அவர் விடாப்பிடியாக கேட்பார்.
குழப்பம் - தெளிவில்லாத முடிவு
இப்படி நிறைய பேரிடம் கருத்துக்களை மாறி மாறி கேட்பதாலேயே அவர் மனதுக்குள் நிறைய குழப்பங்களுக்கு ஆளாகி, ஆசைக்கும் தோல்விக்கும் இடையில் எதை தேர்வு செய்வது என புரியாமல், அரசியல் சம்பந்தமாக குழப்பமான கருத்துக்களையும்; தெளிவில்லாத முடிவுகளையும் தெரிவித்து வந்தார்.
அரசியலில் களமிறங்க முடிவு
இதே நிலையை வெகு நாட்களுக்கு கொண்டு செல்லவும் அவர் விரும்பவில்லை. எப்படியாவது, அரசியல் குறித்து விரைவில் நல்ல முடிவை எடுத்து, அதை அறிவிக்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டார். அதற்காக, பா.ஜ.,வுடன், நெருக்கமாக இருந்து, தன்னுடைய அரசியல் ஆர்வம் குறித்து தெரிவித்து வந்தாலும், ஒரு கட்சிக்குள் தன்னை சுருக்கிக் கொள்வதை அவர் விரும்பவில்லை.
ரசிகர்கள் சந்திப்பு
தற்போதைய நிலையில், தனி கட்சி ஆரம்பிக்கும் எண்ணத்துக்கு அவர் வந்து விட்டார். அதற்கான டீசர்தான், அவர், தமிழகம் முழுவதும் உள்ள தன் ரசிகர்களை, சென்னைக்கு வர வழைத்து அவர்களோடு புகைப்படம் எடுத்துக் கொண்டு, அரசியல் குதிப்பு குறித்து, நிறைய விஷயங்களை, கொஞ்சம் ஆழமாகவும், அழுத்தம் திருத்தமாகவும் சொல்லியிருக்கிறார். ஆக, விரைவில் ரஜினி, அரசியலில் குதிப்பது உறுதியாகி விட்டது.
உசுப்பிய கேரள ஜோதிடர்
இதற்கிடையில், கேரளாவில் இருக்கும் ஜோதிடர் ஒருவரிடம், ரஜினிக்காக அவரது நண்பர் ஒருவர் ஜாதகம் பார்த்திருக்கிறார். ரஜினி, அரசியல் கட்சி ஆரம்பிக்கும் நல்ல நேரம் வந்தாச்சு. இனி எந்த நாளில் அவர் அரசியல் கட்சித் துவங்கினாலும், அவர் நினைத்தது கிட்டும். இன்னொரு எம்.ஜி.ஆர்., ஆக தமிழகத்தை முதல்வராக வலம் வரக் கூடிய யோகம் அவருக்கு இருக்கிறது. தனிக் கட்சி ஆரம்பித்து விட்டு, அக்கட்சியை, தேசிய கட்சியான பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்துக் கொள்ளலாம். ஒரு கட்டத்தில், பா.ஜ.,வும் தனக்கு முழு மரியாதை கொடுத்து, தமிழகத்தை ஆள அனுமதிக்கும்பட்சத்தில், புதிய கட்சியை பா.ஜ.,வோடு இணைத்து விடலாம் என்றும், அந்த ஜோதிடர், நம்பிக்கை வாக்கு கொடுத்திருக்கிறார்.
இதையடுத்தே, நடிகர் ரஜினிக்கு, அரசியல் ஆர்வம் தீவிரமாகி விட்டது. அந்த ஜோதிடர் சொல்லும் பாதையில் பயணிக்கும் முடிவுக்கு வந்திருக்கும் ரஜினி, இப்படியொரு யோகம் தனக்கு இருக்கிறதா என, தமிழகத்தில் பிரபலமாக இருக்கும் ஜோதிடர்களிடமும் கருத்து கேட்டு வருகிறார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.