'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாகுபலி-2 வுக்குப் பிறகு ஸ்பைடர், சாஹோ என சில படங்கள் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழி மற்றும் நான்கு மொழிகளில் தயாராகி வருகின்றன. இந்நிலையில், சிரஞ்சீவி நடிக்கும் 151வது படமான உயாலவாடா நரசிம்ம ரெட்டி என்ற படமும் தமிழ், தெலுங்கில் தயாராகிறது. சிரஞ்சீவியின் பிறந்த நாளான ஆகஸ்ட் 22-ந்தேதி தொடங்கயிருக்கும் இந்த படத்தை சிரஞ்சீவியின் மகனும், நடிகருமான ராம்சரண் தேஜா ரூ.100 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கிறார்.
இந்த படத்தில் எஸ்.எஸ்.தமன் இசையமைக்கிறார். சிவலிங்கா படத்திற்கு பிறகு தமிழில் ஸ்கெட்ச், யார் இவன், வா போன்ற படங்களுக்கு இசையமைத்து வருகிறார் எஸ்.எஸ்.தமன். தமிழை விட தெலுங்கில் அதிகப்படியான படங்களுக்கு இசையமைத்து வருகிறார். முக்கியமாக அங்கு முன்னணியில் இருந்து வரும் தேவிஸ்ரீ பிரசாத்துக்கும், தமனுக்குமிடையே மிகப்பெரிய போட்டியே நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், சிரஞ்சீவியின் 150 படமான கைதி எண் 150 படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்த நிலையில், தற்போது சிரஞ்சீவியின் 151வது படமான உயாலவாடா நரசிம்ம ரெட்டி படத்தை கைப்பற்றியிருக்கிறார் தமன்.