தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
விஷால் அறிவித்துள்ள தொடர் வேலைநிறுத்த போராட்டத்திற்கு தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் ஒத்துழைக்க மறுத்துவிட்டனர். பைரசி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகை வலியுறுத்தி தயாரிப்பாளர் சங்க தலைவரான விஷால் வருகிற 30-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்து இருந்தார். இதற்கு பலர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் தியேட்டர் மற்றும் விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு இந்த வேலைநிறுத்தத்திற்கு ஒத்துழைப்பு தர மறுத்துவிட்டனர்.
இதுதொடர்பாக தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பும் இணைந்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், வருகின்ற 30.5.2017 (செவ்வாய்கிழமை) முதல் தமிழகத்தில் உள்ள திரையரங்குகள் மூடப்படும் என்ற வரும் செய்திகள் உண்மையல்ல, 30.5.2017 (செவ்வாய்கிழமை) அன்று வழக்கம்போல தமிழகத்தில் உள்ள திரையரங்கங்கள் இயங்கும், திரைப்பட காட்சிகள் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.