பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கபாலியை தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு வருகிற 28ஆம் தேதி சென்னை பூந்தமல்லியில் உள்ள ஈவிபி ஸ்டுடியோவில் துவங்கவிருக்கிறது. படத்திற்கு பூஜை போடப்படும் அன்று பப்ளிசிட்டி செய்வதற்காக ரஜினி- 161 படத்திற்கான ரஜினி சம்பந்தப்பட்ட ஃபோட்டோ ஷூட் சமீபத்தில் நடந்தது.
பா.ரஞ்சித் இயக்கவிருக்கும் இப்படத்தின் கதை மும்பை தாராவி பகுதியில் நடப்பது போல் அமைக்கப்பட்டுள்ளதால் மும்பை தாராவி பகுதியை செட்டாக அமைத்துள்ளனர்.
இந்நிலையில் ரஜினி- 161 படத்தில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் அதிகம் இடம்பெற உள்ளது என்ற தகவலும் தற்போது வெளியாகி இருக்கிறது. Life of Pi படத்திற்காக ஆஸ்கர் விருது பெற்றவரும், சமீபத்தில் வெளியான பாகுபலி-2 படத்தில் VFX தொழில்நுட்ப கலைஞராக பணியாற்றியவருமான பெட்டா டிராப்பர் இந்த படத்தில் VFX வேலைகளை செய்யவிருக்கிறார்.
ஆஸ்கார் விருது பெற்ற கலைஞரை கமிட் பண்ணி இருக்கிறார்கள் என்றால் ரஜினி- 161 படத்தின் காட்சிகள் பிரம்மாண்டமாக இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. இதுபோன்ற தகவல்கள் ரஜினியின் புதிய படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் எகிற வைத்துள்ளது.