‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
பிக்கு படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் சுஜித் சிர்கார், அடுத்தப்படியாக போராளி உதம் சிங் வாழ்க்கையை மையமாக வைத்து படம் இயக்க திட்டமிட்டுள்ளார். ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு முக்கிய காரணமாக இருந்த ஜெனரல் ஓ டயரை பழிவாங்க, லண்டன் சென்று அங்கு அவரை சுட்டு கொன்றவர் தான் இந்த உதம் சிங். இந்த ரோலில் யாரை நடிக்க வைக்கலாம் என்று யோசித்த இயக்குநருக்கு, ரன்பீர் கபூரை நடிக்க வைக்க ஆசை. இதுதொடர்பாக விரைவில் ரன்பீரிடம் பேச உள்ளார் சுஜித். தற்போது கதைக்கு இறுதிவடிவம் கொடுத்து வரும் இயக்குநர், அந்த பணியை முடித்ததும் ரன்பீரிடம் பேச உள்ளாராம். சுஜித்தின் ஆசையை ரன்பீர் நிறைவேற்றுவாரா...? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.