இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
மலையாள சினிமாவில் இரட்டை எழுத்தாளர்களின் ஆதிக்கம் சில வருடங்களுக்கு முன் அதிகம் இருந்தது.. இப்போதும் அவர்களின் ஆதிக்கம் இருக்கிறதுதான் என்றாலும் இரட்டையர்கள் பெரும்பாலும் தனித்தனியாக பிரிந்து கதாசிரியராகவும் இயக்குனராகவும் தங்களது தனித்திறமைகளை காட்ட துவங்கிவிட்டனர். அப்படி இரட்டை இயக்குனர்களில் சாச்சி-சேது என்கிற இருவர் தனியாக பிரிந்தனர். இதில் சாச்சி கடந்த 2015ல் பிருத்விராஜை வைத்து அனார்கலி' என்கிற ஹிட் படத்தை கொடுத்துவிட்டார்..
இப்போது சேது தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயம்.. அதற்கேற்றாற்போல் அவருக்கு தனது படத்தை இயக்கி இயக்குனராகும் வாய்ப்பை கொடுத்துள்ளார் மெகாஸ்டார் மம்முட்டி. படத்தின் பெயர் 'கோழி தங்கச்சன்'. இதில் விசேஷம் என்னவென்றால் படத்தில் அவருக்கு உதவி இயக்குனராக பணியாற்ற இருக்கிறார் மலையாள சினிமாவின் இளம் நடிகரான உன்னி முகுந்தன். இந்த சேது தான் உன்னி முகுந்தனுக்கு, இயக்குனர் வைசாக் மூலம் ஹிட் கொடுத்த 'மல்லு சிங்' படத்திற்கும் கதை எழுதியவர். அதேசமயம் நடிகர் தனுஷ் மலையாளத்தில் முதன்முறையாக தயாரிக்கும் படத்தில் தற்போது முக்கிய வேடத்திலும் நடித்து வருகிறார் இந்த உன்னி முகுந்தன்.