இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
அல்லு அர்ஜூன் கார் டிரைவராக பணியாற்றும் மகிபால் என்பவர் மீது ரமேஷ் கிருஷ்ணா என்பவர் போலீஸில் புகார் அளித்துள்ளார். சில தினங்களுக்கு முன் அல்லு அர்ஜூன் தனது குடும்பத்துடன் ஐதராபத்தில் பஞ்சாரா ஹில்ஸ் ஒன்னாம் நம்பர் சாலியில் உள்ள ஹோட்டலுக்கு சென்றுள்ளனர். அவர்கள் ஹோட்டலுக்குள் சென்றபின், பார்க்கிங்கில் காரை நிறுத்த மகிபால் சென்றாராம். அப்போது பார்க்கிங் பகுதியில் இருந்து தனது காரை வெளியே எடுக்க முயன்ற ரமேஷ்கிருஷ்ணன் என்பவரது கார் அல்லு அர்ஜுனின் விலையுயர்ந்த கார் மீது சற்றே உராய்ந்து சேதப்படுத்தி விட்டதாக சொல்லப்படுகிறது..
இதனால் கோபமான மகிபால், ரமேஷ் கிருஷ்ணாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, செலவு தொகையாக ஆரம்பத்தில் 20 ஆயிரம் கேட்டாராம். பின்னர் போகப்போக 2 லட்ச ரூபாய் தர வேண்டும் என தொகையை உயர்த்தி மிரட்டவும் செய்தாராம். பின்னர் தன்னிடமிருந்து காரை வலுக்கட்டாயமாக பறித்துக்கொண்டார் என சம்பந்தப்பட்ட நபர், ட்ரைவர் மகிபால் மீது போலீஸில் புகார் கொடுத்துள்ளாராம். போலீஸார் என்ன நடந்ததென விசாரித்து வருகின்றனராம்.