'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஏக்தா டைகர் படத்தின் தொடர்ச்சியாக அதன் இரண்டாம் பாகம் தற்போது டைகர் ஜிந்தா ஹே என்ற பெயரில் உருவாகி வருகிறது. அலி அப்பாஸ் ஜாபர் இயக்க, சல்மான்-கத்ரீனா ஜோடியே நடிக்கிறார்கள். முதற்கட்ட படப்பிடிப்பு இந்தியாவில் நடந்து முடிந்த நிலையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக டைகர் ஜிந்தா ஹே படக்குழு துபாய் பறந்தனர். கடந்த சில நாட்களாக படப்பிடிப்பு துபாயில் பரபரப்பாக நடந்தது, ஆக்ஷ்ன் காட்சிகள் விறுவிறுப்பாக நடந்து வந்தது. இந்நிலையில் துபாயில் நடந்த படப்பிடிப்பை முடித்துள்ளார்கள். இதை இயக்குநர் அலி அப்பாஸ் ஜாபர் தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். அதோடு சல்மான் முகம் தெரியாமல், அவர் கையில் துப்பாக்கி வைத்திருக்கும் போட்டோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். தொடர்ந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாக உள்ளது. இந்தாண்டு இறுதியில் படத்தை ரிலீஸ் செய்ய உள்ளனர். டைகர் ஜிந்தா ஹே படத்தை ஆதித்யா சோப்ரா தயாரிக்கிறார்.