ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
'பாகுபலி 2' படம் கடந்த ஏப்ரல் மாதம் 28ம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியானது. படம் வெளியான முதல் நாளிலிருந்தே பல புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது. ஹிந்தித் திரையுலக வரலாற்றில் நேரடி ஹிந்திப் படங்களின் சாதனையையும் முறியடித்து இந்தப் படம் 500 கோடி ரூபாய் வசூலை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது. உலக அளவில் 1500 கோடி ரூபாயைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் 100 கோடியைக் கடந்தும், கர்நாடகாவில் 100 கோடியை நெருங்கியும், கேரளாவில் 50 கோடியைக் கடந்தும் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது.
'பாகுபலி 2' படத்தின் இப்படிப்பட்ட பிரம்மாண்டமான சாதனைகள் ஹிந்தித் திரையுலகின் முன்னணி நடிகர்களான ஆமீர்கான், சல்மான் கான், ஷாரூக் கான், அமிதாப் பச்சன் உள்ளிட்ட நடிகர்களுக்குத் தெரியவேயில்லை போலிருக்கிறது. இதுவரை அவர்கள் இந்தப் படம் பற்றி ஒரு வார்த்தை கூட வாய் திறந்து பாராட்டவில்லை. இரண்டு வாரங்கள் கழித்து இப்போதுதான் மற்ற முன்னணி நடிகர்களான அக்ஷய் குமார், ரன்வீர் சிங் படத்தைப் பற்றி டிவிட்டரில் பாராட்டியிருக்கிறார்கள்.
“கடைசியாக 'பாகுபலி 2' படத்தைப் பார்த்துவிட்டேன். இப்படம் பற்றிய ஒவ்வொரு மேலான விளம்பரத்திற்கும், வெற்றிக்கும் இந்தப் படம் உரித்தானது. இந்திய சினிமாவை சர்வதேச அளவிற்குக் கொண்டு சென்றுவிட்டது. குழுவினருக்கு என் வாழ்த்துகள்,” என அக்ஷய் குமார் பாராட்டியுள்ளார்.
ரன்வீர் சிங் விதவிதமான 'எமோஜி'க்களால் பாராட்டியுள்ளார்.
இருவருக்கும் 'பாகுபலி 2' படத்தின் இயக்குனர் ராஜமௌலி தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.