ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சினிமாவில் கதாநாயகியாக வேண்டும் என்ற கனவுகளோடு வந்த பல நடிகைகள் சரியான வாய்ப்புகள் அமையாததால் குத்தாட்ட நடிகை, கேரக்டர் நடிகை என்று ரூட்டை மாற்றியுள்ளனர். அந்த வரிசையில் இணைந்தவர்கள் தான் ரிஷா, சுஜா வாருணி, அஷ்மிதா ஆகியோர். இவர்களில் சுஜா, ரிஷா தற்போது குத்தாட்டமாடினாலும் கேரக்டர் நடிகைகளாகவும் உருவெடுத்துள்ளனர். ஆனால், விஜய் ஆண்டனி நடித்த சலீம் படத்தில் மஸ்காரா பாடலுக்கு நடனமாடிய அஷ்மிதா தற்போது கதாநாயகியாக உருவெடுத்திருக்கிறார்.
இதுபற்றி அஷ்மிதா கூறுகையில், சினிமாவில் கதாநாயகியாக வேண்டும் என்று தான் நான் வந்தேன். ஆனால் எதிர்பார்த்தபடி வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதனால், சினிமாவில் என்னை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக எனக்கு தெரிந்த நடனத்தை வைத்து பாடல்களுக்கு நடனமாடத் தொடங்கினேன். அதில் மஸ்காரா பாடல் என்னை பிரபலப்படுத்தியது. இந்த நிலையில், தற்போது இட்லி என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறேன்.
கதைப்படி, இன்றைய இளம் பெண்கள் சமூக வலைதளங்களில் சிக்கிக்கொள்ளும் ஒரு பிரதான விசயத்தை மையமாக வைத்து இந்த படம் தயாராகியுள்ளது. இதில் முக்கிய வேடத்தில் நான் நடித்திருக்கிறேன். இந்த இட்லி படத்தின் டப்பிங் பணிகள் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. மேலும், இந்த படத்தில் கதாநாயகியாகி விட்டதால் குத்துப்பாட்டுக்கு ஆடுவதை நான் தவிர்க்கவில்லை. கதாநாயகியாக எனக்கொரு இடம் கிடைக்கும் வரை குத்துப்பாடல்களுக்கும் நடனமாடுவதையும் தொடருவேன் என்கிறார் அஷ்மிதா.