ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி, அவரது அரசியல் பயணத்தை இனி யாராலும் தடுக்க முடியாது என்று பிரபல ஜோதிடர் ஷெல்வி கணித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் ரஜினிகாந்த். இவர் அரசியலுக்கு வருவார் என்று பல ஆண்டுகளாக அவரது ரசிகர்கள் காத்துகிடக்கின்றனர். ஆனால் இதுவரை அவரது பேச்சுகள் எல்லாம் புலி வருகிற கதையாகத்தான் இருந்தது. ஆனால் நேற்றைய அவரது பேச்சில் ஒரு மாற்றம் தெரிந்தது.
அதாவது, "என் வாழ்க்கை, அந்த ஆண்டவன் கையில் உள்ளது. இப்போது, நடிகனாக இருக்க வேண்டும் என்பது, கடவுளின் ஆணை. நாளை, நான் என்ன செய்ய வேண்டும் என்பதை, கடவுள் தான் தீர்மானிக்க வேண்டும். எந்த பொறுப்பானாலும், நேர்மையாக, உண்மையாக செய்வேன். ஒரு வேளை, நான் அரசியலுக்கு வரும் சூழல் உருவானால், பணம் சம்பாதிக்க நினைப்பவர்களை, என் அருகே கூட சேர்க்க மாட்டேன். அவ்வாறான தவறான எண்ணம் உடையவர்கள், இப்போதே என்னை விட்டு சென்று விடுங்கள். இல்லையென்றால், நானே ஒதுக்கி விடுவேன்" என்றார்.
ரஜினியின் இந்த பேச்சு அவரது ரசிகர்கள் வட்டாரத்தில் மட்டுமல்லாது, தமிழக அரசியல் வட்டாரத்திலும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் ரஜினி, கண்டிப்பாக அரசியலுக்கு வருவார் என்று பிரபல ஜோதிடர் ஷெல்வி கூறியுள்ளார்.
இதுகுறித்து ஷெல்வி கூறியதாவது... நடிகர் ரஜினிகாந்த்திற்கு மகர ராசி, திருவோணம் நட்சத்திரம், சிம்ம லக்னம். அவருக்கு 19 வருடமாக சனி திசை இருந்து வருகிறது. அதனால் அவருக்கு உடல்நலம் பாதிப்பு அதிகம் இருந்தது. வருகிற 31.01.18 உடன் சனி திசை முடிந்து புதன் திசை ஆரம்பமாகிறது. ரஜினியின் ராசிப்படி புதன் திசையில் கல்வி சம்பந்தப்பட்ட விஷயத்தில் அதிகம் நாட்டம் இருக்கும். அதுவே அவரை அரசியலுக்கு இழுத்து வந்துவிடும். பொதுமக்களுக்காக அவர் அறக்கட்டளை ஒன்றை துவங்கி, கல்வி தொடர்பான உதவிகளை செய்வார். அப்படியொரு சூழல் அவரது ஜாதகத்தில் இருக்கிறது.
இந்தக்காலக்கட்டத்தில் தான் அவர் அரசியலுக்கு வருவதற்கான சூழலும் இருக்கிறது. இனி அவர் பின்வாங்க மாட்டார். தனிச்சையாக இயங்குவது தான் ரஜினிக்கு பிடிக்கும். ஆகையால் யாருடனும் கூட்டணி இல்லாமல் தனிக்கட்சி தொடங்க வாய்ப்பு இருக்கிறது. ரஜினி அரசியலுக்கு வருவதை இனி யாராலும் தடுக்க முடியாது, நிச்சயம் அவர் வந்தே தீருவார். 69 வயது, 6 மாதம், 14 நாள் இதற்குள் ரஜினியின் அரசியல் பிரவேசம் ஆரம்பமாகும். இனி அவருக்கு எல்லாமே ஜெயம் தான். அதேசமயம், ரஜினி தன் உடல்நிலையில் மிகுந்த அக்கறையுடனும், கவனமாகவும் இருக்க வேண்டும்.
இவ்வாறு ஷெல்வி கூறினார்.