600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
மூன்று வாரங்களை கடந்தும் கூட நாடு முழுக்க பாகுபலி பீவர் இன்னும் குறையவில்லை என்று தான் எண்ண தோன்றுகிறது. தமிழ், தெலுங்கு மட்டுமல்லாது ஹிந்தியிலும் பட்டையை கிளப்பி கொண்டிருக்கிறது பாகுபலி-2 படம். பாகுபலி-2வால் பல படங்களின் ரிலீஸ் தேதி தள்ளி போய் உள்ள நிலையில் கடந்த வெள்ளியன்று பாலிவுட்டில், சர்கார்-3 மற்றும் மேரி பியாரி பிந்து படங்கள் வெளியாகின. சர்கார்-3யில் அமிதாப்பும், மேரி பியாரி பிந்து படத்தில் ஆயுஸ்மான் குராணாவும் நடித்திருந்தனர்.
பாகுபலி-2 படத்திற்கு தொடர்ந்து வரவேற்பு இருப்பதால் இந்த இரண்டு படங்களுக்கும் போதிய வசூல் கிடைக்கவில்லை. கடந்த இரண்டு நாட்களில் சர்கார்-3 படத்திற்கு வெறும் ரூ.4.35 கோடியும், மேரி பியாரி பிந்து படத்திற்கு ரூ.4 கோடி மட்டுமே வசூல் கிடைத்துள்ளன. இன்னும் ஒருவாரம் இந்த படங்கள் ஓடினால் கூட முதலீட்டை கூட எட்டுமா என்று தெரியவில்லை, ஆகையால் இரண்டு படங்களும் தோல்வி படங்களாக தான் அமையும் என விநியோகஸ்தர்கள் தெரிவிக்கிறார்கள்.