'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற விவாதம் மீண்டும் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது. இதற்கு காரணம்... வேறு யாரோ அல்ல, ரஜினியே தான். இன்று தன்னுடைய ரசிகர்களை சந்தித்த ரஜினி அப்போது நீண்ட உரையாற்றினார். அவரது பேச்சில், விரைவில் அவர் அரசியலுக்கு வருவதாற்கான வாய்ப்பு இருப்பதாக எண்ண வைக்கும் பல விஷயங்கள் இடம்பெற்றுள்ளன. தன்னுடைய பேச்சில் பல விஷயங்களைக் குறிப்பிட்டு பேசிய ரஜினி தன்னுடைய அரசியல் பிரவேசம் குறித்தும் பேசினார்.
“பல ரசிகர்கள் எனக்கு நிறைய கடிதங்கள் எல்லாம் எழுதியுள்ளார்கள். நாமும் படம் பார்த்துக் கொண்டு இப்படியே இருந்தால் எப்படி?, நாம் எப்போது முன்னேறுவது, நமக்கு முன்னால் வந்தவர்கள் எல்லாம் இன்னோவா வண்டியில் போகிறார்கள், கவுன்சிலர் ஆகிறார்கள், எம்.எல்.ஏ ஆகிறார்கள், மந்திரி ஆகிறார்கள். நாம் எப்போது அப்படி ஆவது, பணம் சம்பாதிப்பது என்று சில ரசிகர்கள் கேட்கிறார்கள், பத்திரிகைகளுக்கு பேட்டியும் கொடுக்கிறார்கள். அது தப்பில்லை. கவுன்சிலர் ஆகலாம், மந்திரி ஆகலாம் என்ற ஆசையிருப்பதில் தவறில்லை. ஆனால், அதை வைத்து பணம் சம்பாதிப்பது என்று நினைப்பது தவறு. அவர்கள் சொல்வதைக் காணும் போது வருத்தப்படுவதா, கோபப்படுவதா, சிரிப்பதா என தெரியவில்லை.
நான் அப்போதும் சொல்கிறேன், இப்போதும் சொல்கிறேன். ஆண்டவன் கையில் தான் என் வாழ்க்கையுள்ளது. இப்போது நடிகனாக எனது கடமையை செய்து கொண்டிருக்கிறேன். மக்களை மகிழ்விக்கிறேன். அதே மாதிரி நாளைக்கு கடவுள் என்ன பொறுப்புக் கொடுத்தால் கூட நியாயமா, உண்மையா, சத்தியமாகச் செய்வேன். அது என்ன என்பது எனக்கு தெரியாது. கடவுளுக்குத் தான் தெரியும். ஒரு வேளை நான் அரசியலுக்கு வரவில்லை என்றால் நீங்கள் ஏமாந்து போய்விடுவீர்கள். அப்படி ஒரு சூழல் ஏற்பட்டு அரசியலுக்கு வந்தால், பணம் சம்பாதிக்கும் ஆட்களை எல்லாம் கிட்டக்கூட சேர்க்க மாட்டேன்.” என்று பேசியது மட்டுமல்ல, ரசிகர்களை சந்தித்த மேடையில் தாமரை சின்னத்தையும் இடம் பெற செய்திருந்தார். இதை வைத்து அவர் விரைவில் பா.ஜ.க.வில் சேர இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.