இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் |
ஷங்கர் இயக்கத்தில் அர்ஜூன், மனீஷா கொய்ராலா, ரகுவரன் நடிப்பில் வெளியான படம் முதல்வன். அரசியல் பேசிய இப்படம் வெற்றி பெற்றது. இதையே ஹிந்தியில் நாயக் என்ற பெயரில் ரீ-மேக் செய்தார் ஷங்கர். அனில் கபூர், ராணி முகர்ஜி, அம்ரிஷ் பூரி முக்கிய ரோலில் நடித்திருந்தனர். தமிழ் அளவுக்கு வெற்றி பெறாவிட்டாலும், அனைவராலும் இப்படம் பாராட்டப்பட்டது. அதேப்போன்று சிவா இயக்கத்தில் தமிழில் வெளியான சிறுத்தை படம் ஹிந்தியில் ரவுடி ரத்தோர் என்ற பெயரில் ரீ-மேக்கானது. அக்ஷ்ய் குமார் நடிக்க, படம் சூப்பர் ஹிட்டானது. பிரபுதேவா இயக்கினார்.
இந்நிலையில் இப்போது நாயக் மற்றும் ரவுடி ரத்தோர் படங்களின் இரண்டாம் பாகத்திற்கு கதை எழுதும் பணி துவங்கியுள்ளது. இதை இன்று இந்திய சினிமாவே கொண்டாடும் பாகுபலி படத்தின் கதாசிரியரும், ராஜமெளலியின் அப்பாவுமான கேவி விஜயேந்திர பிரசாத் எழுதி வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது... "நாயக் மற்றும் ரவுடி ரத்தோர் 2-க்கான கதையை எழுத தொடங்கியுள்ளேன். இன்னும் முடியவில்லை, ஆகையால் மேற்கொண்டு இதுப்பற்றி எதுவும் கூற இயலாது. ஒரு படத்தின் தொடர்ச்சியாக இன்னொரு பாகத்திற்கு கதை எழுதுவது ஹிந்தியில் இது தான் முதல்முறை. அடுத்தாண்டு இதன் படப்பிடிப்புகள் துவங்கும் என நம்புகிறேன்" என்று கூறியுள்ளார் விஜயேந்திர பிரசாத்.
கேவி விஜயேந்திர பிரசாத் தான் சல்மான் கான் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற பஜ்ரங்கி பைஜான் படத்திற்கு கதை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.