இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
சமூக வலைத்தளங்களில் உள்ளவர்களுக்கு 'அலசி ஆராய்வதற்கு' ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொரு 'டாபிக்' எப்படியாவது கிடைத்துவிடுகிறது. இன்று அவர்களுக்குக் கிடைத்திருக்கும் 'டாபிக்' அடுத்த சில நாட்களுக்கான 'ஆராய்ச்சி'யில் எந்த குறையையும் வைக்காது.
ரஜினிகாந்த் ரசிகர்களை பல வருடங்களுக்குப் பிறகு சந்தித்து, மொத்தமாக புகைப்படம் எடுக்கும் நிகழ்வு இன்று காலை சென்னையில் ஆரம்பமானது. முன்னதாக ரசிகர்கள் முன் பேசிய ரஜினிகாந்த் 21 வருடங்களுக்கு முந்தைய தன்னுடைய 'ரஜினி வாய்ஸ்' பற்றி மட்டுமல்லாமல், தன்னைப் பற்றிய ஊடகங்களின் விமர்சனங்கள், கருத்துக்கள் ஆகியவற்றிற்கும் பதிலளிக்கும் விதமாகப் பேசினார்.
வழக்கம் போலவே நான் அரசியலுக்கு வருவேனா என்பது ஆண்டவனின் கையில்தான் உள்ளது என்று தன் 'அரசியல் என்ட்ரி' பற்றி மீண்டும் சஸ்பென்ஸ் வைத்துவிட்டார்.
ரஜினிகாந்தின் இன்றைய பேச்சுக்கள் அனைத்துமே அரசியல் ரீதியாக பல விமர்சனங்களை ஆரம்பித்துவிட்டது. அரசியல் கட்சித் தலைவர்கள் பதில் சொல்வதற்கு முன்பாக சமூக வலைத்தளவாதிகள் ரஜினியின் பேச்சுக்களுக்கு 'மீம்ஸ்களையும், கமெண்ட்டுகளையும்' பறக்கவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ரஜினியின் இன்றைய பரபரப்புப் பேச்சு என்ன தாக்கத்தைக் கொடுக்கப் போகிறது என்பது இனிமேல்தான் தெரிய வரும்.