'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? |
இசை அமைப்பாளர் இளையராஜா, இலங்கையில் இசை நிகழ்ச்சி நடத்த இருப்பதாக செய்திகள் வெளியானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெரியார் திராவிட கழகத்தினர் தி.நகரில் உள்ள இளையராஜா வீட்டு முன் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள்.
அந்த அமைப்பின் வடக்கு மண்டல அமைப்பாளர் கரு.அண்ணாமலை தலைமையில் ஏராளமானவர்கள் இளையராஜா வீட்டு முன் கோஷங்களை எழுப்பினார்கள். இலங்கை மற்றும் இளையராஜாவை எதிர்த்து அவர்கள் கோஷமிட்டனர். முடிவில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 30 பேரை போலீசார் கைது செய்தனர். முற்றுகை போராட்டத்தையொட்டி இளையராஜா வீட்டு முன் ஏராளமான போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டிருந்தார்கள். தொடர்ந்து அவரது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
"இலங்கையில் இசை நிகழ்ச்சி நடத்த சில அமைப்புகள் அணுகியது உண்மை தான். ஆனால் இதுவரை அதற்கு இளையராஜா ஒப்புதல் அளிக்கவில்லை. எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை" என்று இளையராஜா தரப்பினர் தெரிவிக்கிறார்கள்.