தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சமாளிக்க முடியாத அளவிற்கு கடன் தொல்லை நெருக்கும்போது மஞ்சள் நோட்டீஸ் கொடுப்பது (திவால் நோட்டீஸ்) கொடுப்பது வழக்கம். அதாவது என்னால் உங்கள் கடனை திருப்பி கொடுக்க முடியவில்லை என் சொத்துக்களை பிரித்து எடுத்துக் கொள்ளுங்கள் என்று இதன் பொருள். அப்படி ஒரு நோட்டீசை கொடுத்த முதல் ஹீரோ டி.ஆர்.மகாலிங்கம்.
மதுரை மாவட்டம் சோழவந்தானைச் சேர்ந்தவர் டி.ஆர்.மகாலிங்கம். பாடும் திறமை கொண்ட மகாலிங்கம் நாடகத்தில் நடித்து வந்தார். பின்னர் நந்தகுமார் படத்தில் பாலகிருஷ்ணனாக நடித்து சினிமாவில் அறிமுகமானார். 1945ம் ஆண்டு மகாலிங்கம் நடித்த ஸ்ரீவள்ளி படம் பெரும் வெற்றி பெறவே பெரிய ஹீரோ ஆனார். அதன் பிறகு டி.ஆர்.மகாலிங்கம் நடித்த நாம் இருவர், ஞானசவுந்தரி, வேதாள உலகம், ஆதித்யன் கனவு, பவளக்கொடி, லைலா மஜ்னு உள்ளிட்ட பல படங்கள் பெரும் வெற்றி பெற்றது.
நல்ல வசதியுடன் சொகுசாக வாழ்ந்தார். பட வாய்ப்புகள் குறைந்ததும் தன் மகன் பெயரில் சுகுமார் புரொடக்ஷன் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி மச்சரேகை படத்தை தயாரித்தார். அது பெரும் தோல்வி அடைந்தது. அதில் இழந்த பணத்தை மீட்க விளையாட்டு பொம்மை படத்தை தயாரித்தார். அதுவும் தோல்வி அடைந்தது. இரண்டு படங்களிலும் பெரும் நஷ்டத்தை சந்தித்த டி.ஆர்.மகாலிங்கம், கடன்காரர்களை சமாளிக்க மஞ்சள் நோட்டீஸ் கொடுத்தார்.
அதன்பிறகு கவியரசர் கண்ணதாசன் டி.ஆர்.மகாலிங்கத்துக்கு உதவுவதற்காக மாலையிட்ட மங்கை படத்தை தயாரித்து அதில் டி.ஆர்.மகாலிங்கத்தை மீண்டும் நடிக்க வைத்தார். அந்தப் படம் வெற்றி பெற்றதும் மேலும் சில படங்களில் நடித்தும், நாடகம் நடத்தியும் தன் கடன்களை அடைத்தார் டி.ஆர்.மகாலிங்கம்.