பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
சாட்டை படத்தில் யுவனுக்கு ஜோடியாக நடித்தவர் மலையாள நடிகை மகிமா நம்பியார். அதன்பிறகு ஓரிரு படங்களில் நடித்த அவருக்கு அந்த படங்கள் சரியான ரீச் கொடுக்கவில்லை. இருப்பினும், குற்றம்-23 படத்தின் ஹிட் காரணமாக தற்போது ஐங்கரன், இரவுக்கு ஆயிரம் கண்கள், கொடிவீரன் என மூன்று தமிழப்படங்களை கைப்பற்றி முன்னணி நடிகை பட்டியலில் இடம் பிடிக்கும் தருவாயில் இருக்கிறார் மகிமா நம்பியார்.
இதுபற்றி அவர் கூறுகையில், எனக்கு அடுத்தடுத்து இத்தனை பெரிய நடிகர்களின் படங்கள் கிடைத்திருப்பதற்கு காரணம், குற்றம்-23 படம் தான். அந்த படத்தில் என்னை நம்பி நல்ல வேடத்தை கொடுத்தார் இயக்குனர் அறிவழகன். அதோடு கேமராமேன் என்னை ரொம்ப அழகாக காண்பித்திருந்தார். அந்த படத்தைப் பார்த்துதான் ஜி.வி.பிரகாஷின் ஐங்கரன் புக்கானது. அதன்பிறகு அருள்நிதியின் இரவுக்கு ஆயிரம் கண்கள், இப்போது சசிகுமாரின் கொடிவீரன் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறேன். இதுதவிர மலையாளத்தில் மம்மூட்டி யுடன் ஒரு படத்தில் கமிட்டாகியிருக்கிறேன்.
இப்படி ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து வரும் எனக்கு அழுத்தமான கதாபாத்திரங்கள் கிடைத்திருக்கிறது. அப்படி என் திறமை மீது நம்பிக்கை வைத்து கொடுத்த இயக்குனர்கள் ஒருவர்கூட என்னை கிளாமராக நடிக்க வேண்டும் என்று சொன்னதில்லை. ஹோம்லியான வேடங்களில் மட்டுமே நடிக்க வைத்துள்ளனர். அந்த வகையில, நான் ரொம்ப லக்கியாக உணர்கிறேன் என்கிறார் மகிமா நம்பியார்.