தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ராகவா லாரன்ஸ். நடன அமைப்பாளராக தனது திரைப்பயணத்தை ஆரம்பித்து, இன்று, நடிகராக, இயக்குநராக, தயாரிப்பாளராக உயர்ந்துள்ளார். சினிமா தவிர்த்து நிறைய நலத்திட்ட உதவிகளையும் தனது அறக்கட்டளை மூலமாக செய்து வருகிறார். இந்நிலையில் தன் அம்மா கண்மணிக்கு லாரன்ஸ் கோயில் கட்டி உள்ளார்.
சென்னை திருமுல்லைவாயலில் ராகவேந்தர் கோயில் அருகே தனது தாயார் கண்மணிக்கு லாரன்ஸ் கட்டியுள்ள கோயிலை அன்னையர் தினமான இன்று, ஸ்டன்ட் மாஸ்டர் சூப்பர் சுப்பராயன் திறந்து வைத்தார். ஆரம்ப காலத்தில் லாரன்ஸ் கஷ்டப்பட்ட போது ஆதரவு கரம் நீட்டியவர் சூப்பர் சுப்பராயன் என்பதால் அவரை வைத்து சிலையை திறந்துள்ளார்..
மேலும் இந்த விழாவில் வயது மூத்த ஆயிரம் தாய்மார்களுக்கு சேலையும், ஆறு விவசாய பெண்களுக்கு தாலியையும் லாரன்சின் தாயார் கண்மணி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். இருப்பினும் முக்கிய பிரபலங்கள் பலரை இன்றிலிருந்து 48 நாள் முடிந்த மறுநாள் அழைக்க உள்ளார் லாரன்ஸ். அன்று கலையுலத்தை சேர்ந்தவர்கள் உட்பட பல துறைகளை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.