‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
பிரபல பின்னணி பாடகியும், ரேடியோ ஜாக்கியுமான சுசித்ரா கடந்த சில மாதங்களாகவே பரபரப்பு செய்திகளில் வந்து கொண்டிருக்கிறார். தனது டுவிட்டர் பக்கத்தில் நடிகர் தனுஷ், ராணா, நடிகைகள் ஆண்ட்ரியா, த்ரிஷா, தொகுப்பாளர் டிடி, ஆகியோரின் அந்தரங்க படங்களை வெளியிட்டு அவர்களை பற்றி திடுக்கிடும் குற்றச்சாட்டுகளையும் கூறியிருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து அவர் படங்களை வெளியிட்டதால் சுச்சிலீக்ஸ் என்றே அதனை அழைக்க ஆரம்பித்தார்கள்.
அதன் பிறகு ஒரு நாள் "நான் எந்த படத்தையும் பதிவேற்றவில்லை. நான் யாரைப் பற்றியும் புகார் சொல்லவில்லை. என் பெயரில் யாரோ செய்த வேலை" என்றார். இதனால் பலரும் விளக்கம் பெற அவரைத் தேடும்போது அமெரிக்கா சென்று விட்டார். மனநல சிகிச்சை பெறுவதற்கு சென்றிருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை திரும்பிய அவர் நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலத்திற்கு திடீரேன வந்தார். தன் கைப்பட எழுதிய புகார் மனுவை கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
என்னுடைய டுவிட்டர் கணக்கை மார்ச் மாதம் 2ந் தேதி ஹேக் செய்து விட்டார்கள். அந்த மர்ம நபர்கள் சினிமா துறையைச் சேர்ந்தர்கள் பற்றிய ஆபாச படங்களையும், கருத்துக்களையும் அதில் வெளியிட்டார்கள். பல சினிமா பிரபலங்களுக்கு மிரட்டலும் விடுத்தார்கள்.
எனது பெயரில் சுசிலீலை, சுசிலீக்ஸ், சிங்கர் சுசித்ரா, சுசித்ரா ரியல், சுசித்ரா பேன்ஸ் என்ற பெயரில் போலி டுவிட்டர் கணக்கு ஆரம்பித்து நடத்தி வருகிறார்கள். எனக்கும் அந்த டுவிட்டர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனவே போலி டுவிட்டர் கணக்கை கையாள்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருக்கிறார்.
கமிஷனர் அலுவலகம் வந்த சுசித்ராவை மீடியாக்கள் பேட்டியெடுக்க முயற்சித்தனர். "நான் இப்போது மீடியாக்களிடம் பேசுவதாக இல்லை. பேசுவதற்கு எதுவும் இல்லை. நானும் மீடியாவைச் சேர்ந்தவள்தான் என்பதை மனதில் கொள்ளுங்கள்" என்று கூறிவிட்டு வேகமாகச் சென்று விட்டார்.