தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய். தமிழ்நாட்டை சுனாமி தாக்கியபோது ஓடோடி வந்து உதவி செய்த முதல் பாலிவுட் நடிகர். அதேபோன்று தற்போது சமீபத்தில் நடந்த இந்தியா பாகிஸ்தான் துப்பாக்கி சண்டையில் பலியான ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு 25 வீடுகள் வழங்கி உள்ளார்.
விவேக் ஓபராய், ஓபராய் கன்ஸ்ட்ரக்ஷன் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தை மகாராஷ்டிராவில் நடத்தி வருகிறார், இந்த நிறுவனத்தின் சார்பில் விற்பனைக்காக கட்டப்பட்டு வரும் வீடுகளிலிருந்து 25 வீடுகளை வழங்கி உள்ளார்.
சட்டீஷ்கர் மாநிலத்தில் கடந்த மார்ச் மாதம் நடந்த சம்பவத்தில் உயிர் தியாகம் செய்த 4 எல்லை பாதுகாப்பு படை வீரர்களின் குடும்பங்களுக்கு முதல் கட்டமாக வீடுகள் வழங்கப்பட்டு விட்டது. மீதமுள்ள 21 வீடுகள் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த உயிர்நீத்த வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட இருக்கிறது. ஒவ்வொரு வீடும் 30 லட்சம் முதல் 50 லட்சம் வரை விலை உள்ளவை என்பது குறிப்பிடத்தக்கது.