ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ரஜினிகாந்த், அஜித், விஜய் நடித்த படங்கள்தான் இதுவரை தமிழ்நாட்டில் 100 கோடியைக் கடந்து வசூலித்துள்ளன. அவர்கள் நடிக்காத ஒரு படம் 100 கோடியைக் கடக்கிறது, அதிலும் ஒரு காட்சி கூட தமிழ்நாட்டில் படம் பிடிக்கப்படாத ஒரு படம் 100 கோடியைக் கடக்கிறதென்றால் அது சாதாரண விஷயமல்ல. பாகுபலி 2 படம் அந்த மகத்தான சாதனையைப் புரிந்திருக்கிறது. அதிலும் படம் வெளியான 3 வாரங்களுக்குள்ளாகவே அந்த சாதனை நிகழ்வதும் குறிப்பிட வேண்டியது.
மக்களை குடும்பம் குடும்பமாக தியேட்டர்களுக்கு வரவழைத்த பெருமை இந்தப் படத்திற்கு உண்டு. படத்தின் கதை என்ன, யார் நடித்திருக்கிறார்கள், உதட்டசைவு தெலுங்கில் இருக்கிறதா, தமிழில் இருக்கிறதா என்று கூட கவனிக்காமல் பாகுபலி 2 படத்தைப் பார்த்து மக்கள் பாராட்டித் தள்ளுகிறார்கள் என்றால் ஒரே விஷயம் பிரம்மாண்டம் மட்டுமே.
தமிழில் அதிகம் அறியப்படாத பிரபாஸ், ராணா இருவரும் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும், இணை, துணை கதாபாத்திரங்களில் நடித்திருந்த அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், நாசர், சத்யராஜ் ஆகியோரும் தமிழ்நாட்டில் மக்களை தியேட்டர்கள் பக்கம் வரவைக்க கூடுதல் காரணமாக இருந்திருக்கிறார்கள்.
இனியும், தங்களது ஹீரோக்களால்தான் படங்கள் 100 கோடி வசூலிக்கும் என்ற தற்பெருமையுடன் மற்ற நடிகர்களின் ரசிகர்கள் உரக்க சொல்லாமல் இருந்தால் நல்லது.