ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மலையாள நடிகை பார்வதியை பொறுத்தவரை சினிமாவில் நடிக்கும் நேரத்தை தவிர மீதி நேரத்தில் அதிகம் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவே பயன்படுத்துகிறார். நேற்று உலக செவிலியர்கள் தினத்தை முன்னிட்டு கொச்சியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் உலக செவிலியர் தின நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டார் பார்வதி. அதுமட்டுமல்ல இந்த விழாவையே ஏற்பட்டு செய்ததும் பார்வதி தானாம்.
கடந்த மாதம் வெளியான டேக் ஆப் படத்தில் நர்ஸ் கேரக்டரில் சிறப்பாக நடித்து பாராட்டுக்களை பெற்றிருந்தார் பார்வதி.. அதனாலேயே என்னவோ இந்த விழாவை தானே முன்னின்று நடத்தியும் உள்ளார். இந்த நிகழ்வில் ஆர்கன் டொனேஷன் குறித்து வலியுறுத்திய பார்வதி, ஆர்கன் டொனேஷன் உறுதிமொழியும் எடுத்துக்கொண்டார். தேசிய விருதுபெற்ற மலையாள குணச்சித்திர நடிகரான சலீம் குமார் நோய்வாய்ப்பட்டிருந்தபோது, இன்னொருவர் தனக்கு கொடுத்த ஆர்கன் டொனேஷனில் தான், தற்போது தான் உயிர் வாழ்ந்து வருவதாக கூறியுள்ளார் என்பது இந்த இடத்தில் குறிப்பிடத்தக்கது.