டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு, ரகுல் ப்ரீதி சிங் மற்றும் பலர் நடிக்கும் 'ஸ்பைடர்' படத்தின் கடைசிகட்டப் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் ஆரம்பமாகியுள்ளது. தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாக்கப்படுவதாக சொல்லப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் ஐதராபாத்திலேயே நடந்தது. தமிழ்ப் படம் என்று சொல்ல வேண்டும் என்பதற்காக சில நாட்கள் மட்டும் சென்னையில் படப்பிடிப்பை நடத்தினார்கள்.
ஜுன் மாதம் 23ம் தேதி இப்படம் வெளியாகும் என்று ஏற்கெனவே அறிவித்திருந்தார்கள். ஆனால், கிளைமாக்சை மாற்ற முருகதாஸ் திடீரென முடிவெடுத்ததாலும், 'பாகுபலி 2' படத்திற்குப் பிறகு விஎப்எக்ஸ் காட்சிகளின் தரம் உயர்ந்ததாலும், படத்தை இன்னும் தரமாகக் கொடுக்க வேண்டும் என படத்தின் வெளியீடு தள்ளிப் போகும் என்கிறார்கள்.
சுமார் ஒரு வருட காலமாக இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. மகேஷ் பாபு நடித்து கடந்த வருடம் வெளிவந்த 'பிரம்மோற்சவம்' படம் தோல்வியடைந்ததையடுத்து 'ஸ்ரீமந்துடு' படத்தை விட பெரிய வெற்றியைத் தர வேண்டும் என மகேஷ்பாபு ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
விரைவில் இப்படத்தின் வெளியீட்டுத் தேதி பற்றி மாற்று அறிவிப்பு வெளியாகலாம்.