ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தன்னை சந்திக்க வரும் ரசிகர்கள் யாரும் தன் காலில் விழ வேண்டாம் என ரஜினி வேண்டுகோள் விடுத்துள்ளார் . நடிகர் ரஜினிகாந்த் வருகிற மே 15-ம் தேதி முதல் 5 நாட்கள் ரசிகர்களை சந்திக்க இருக்கிறார். சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் நடக்க உள்ள இந்த நிகழ்ச்சியில் ரசிகர்களுடன் போட்டோ எடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கு வரும் ரசிகர்கள் கண்டிப்பாக அடையாள அட்டையுடன் வர வேண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ரசிகர்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோளையும் ரஜினி விடுத்துள்ளார். அதில் தன்னை சந்திக்க வரும்போது ரசிகர்கள் யாரும் மாலை, சால்வை போன்றவற்றை அணிவிக்க வேண்டாம். முக்கியமாக யாரும் தன்னுடைய காலில் விழ வேண்டாம் என்று அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.