ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாகுபலி 2 படம் தெலுங்கில் மட்டுமே நேரடியாக எடுக்கப்பட்ட படம். தமிழிலும் அவர்கள் ஒரே சமயத்தில் எடுத்ததாகச் சொன்னாலும் படத்தின் பல காட்சிகளில் உதட்டசைவுகள், பாடல் காட்சிகளின் உதட்டசைவுகள் அனைத்தும் தெலுங்கில் இருந்தது என்பது இரு மொழிகளையும் தெரிந்தவர்களுக்கு நன்றாகவே தெரியும். முதல் பாகத்திலாவது சில க்ளோஸ் அப் காட்சிகளை தமிழில் படமாக்கியிருந்தார்கள். ஆனால், இரண்டாவது பாகத்தில் அதைக் கூடச் செய்யாமல் விட்டுவிட்டார்கள். இருந்தாலும் உதட்டசைவுகளை உன்னிப்பாகக் கவனிக்காத வண்ணம் படத்தின் பிரம்மாண்டம் கவனச் சிதறலை ஏற்படுத்திவிட்டது. அதுதான் இந்தப் படத்தின் பெரிய வெற்றிக்குக் காரணம்.
ஹிந்தியில் மொத்தமாகவே டப்பிங் செய்யப்பட்ட பாகுபலி 2 திரைப்படம் நேரடி ஹிந்திப் படங்களின் இந்திய வசூல் சாதனையை முறியடித்து 400 கோடி ரூபாய் வசூலை இந்த வாரத்தில் தாண்ட உள்ளது. தங்கல் படம்தான் 387 கோடி ரூபாயை இந்திய அளவில் வசூலித்து முதலிடத்தில் இருந்தது. இரண்டு நாட்களுக்கு முன்பே இந்த வசூலை பாகுபலி 2 முறியடித்து 392 கோடி வசூலைப் பெற்றது. இன்றும் நாளைக்குள்ளாகவும் 400 கோடி ரூபாயைக் கடந்து இந்தியத் திரையுலகில், இந்திய வசூலைப் பொறுத்தவரையில் 400 கோடி ரூபாய் வசூலைத் தாண்டும் முதல் படம் என்ற பெருமையை ஒரு ஹிந்தி டப்பிங் படம் பெறப் போகிறது.
இன்னும் தமிழ் டப்பிங், மலையாள டப்பிங், ஆகிய வசூலையும் சேர்த்தால் பாகுபலி 2 டப்பிங் படம் இந்திய அளவில் 500 கோடி வசூலைத் தாண்டும்.
எந்த கான் நடிகர்களும் நடிக்காமல் ஒரு டப்பிங் படம் இந்த அளவிற்கு வசூல் சாதனைப் பெறுவதைப் பார்த்தும், ஹிந்தித் திரையுலகமே ஆடிப் போயிருக்கிறதாம்.