கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
தொடர்ந்து தோல்விப்படங்களில் நடித்து வரும் ஜெய்யின் திரையுலகப்பயணம் ரிவர்ஸ் கியரில் சென்று கொண்டிருக்கிறது. தற்போது அவர் கதாநாயகனாக நடிக்கும் 'பலூன்' படம் வெற்றியடைந்தால் மட்டுமே இந்தநிலை மாறும். இப்படியொரு சிக்கலான சூழலில் தான் இருப்பதை ஜெய் உணரவில்லை என்பதுதான் கொடுமை.
பலூன் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது டப்பிங் வேலைகள் நடைபெற்று வருகின்றன. 70 எம்எம் நிறுவனத்துடன் இணைந்து திலீப் சுப்பராயன் தயாரித்து வரும் இப்படத்தை சினிஷ் இயக்கி வருகிறார். ஜெய்யுடன் அஞ்சலி, ஜனனி ஐயர் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
பலூன் திரைப்படத்தை 'ஆரா சினிமாஸ்' நிறுவனம் விரைவில் வெளியிடவிருக்கிறது. இந்நிலையில் பலூன் படத்துக்கு பிரஸ்மீட் வைத்து புரமோஷன் வேலைகளை தொடங்க தயாரிப்பாளர் திட்டமிட்டு ஜெய்யை தொடர்பு கொண்டபோது, வழக்கம்போல் புரமோஷனுக்கு வர முடியாது என்று சொல்லிவிட்டாராம்.
அஞ்சலியை தொடர்பு கொண்டபோது, போனை எடுக்கவே இல்லையாம். கடந்த சில வாரங்களாக அஞ்சலியை போனில் தொடர்புகொள்ள முயன்று வெறுத்துப்போய் விட்டாராம் தயாரிப்பாளர். புரமோஷனுக்குப் போக வேண்டாம் என அஞ்சலியின் மனதை மாற்றினாரா ஜெய்?